எம்.பிக்களின் தனிப்பட்ட உதவியாளர்களால் யாழ் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் ரகளை!
யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தை நாடாளுமன்ற உறுப்பினர்களின் தனிப்பட்ட உதவியாளர்கள் சிலர் குழப்பியதை அவதானிக்க கூடியதாக இருந்தது.
யாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது இன்றையதினம் (26) இடம்பெற்றது.
அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் இராமலிங்கம் சந்திரசேகரன் தலைமையில் குறித்த கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் அமைதியின்மை
கூட்டத்தின் நடுப்பகுதிக்கு பின்னர் அருச்சுனாவின் விரும்பத்தகாத செயற்பாடுகளால் அவ்வப்போது கூட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டது.
இந்தநிலையில் தையிட்டி திஸ்ஸ விகாரை விவகாரமானது சபையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

அதன்போது பின்னாள் இருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் தனிப்பட்ட உதவியாளர்கள் சிலர் கூட்டத்தில் உரத்து சத்தமிட தொடங்கினர்.
குறித்த விடயத்தை நாடாளுமன்றத்தில் பேசுமாறும் மற்றும் மக்களது கருத்துக்களுக்கு மதிப்பளிக்குமாறு தொடர்ச்சியாக கூச்சலிட்டனர்.
அதையும் மீறி நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் வலி கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் நிரோஷ் உள்ளிட்ட சிலர் தையிட்டி விவகாரம் தொடர்பாக கருத்துரைத்தவாறு இருந்தனர்.
இந்தநிலையில் பின்னால் இருந்து கூச்சலிட்டவர்களுடன் சேர்ந்த சிலர் கூட்டத்தை இடையில் குழப்பியதை அவதானிக்க முடிந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |




