வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பெரும் பாதுகாப்பு! தமிழக அரசியல் கட்சிகள் தீவிரம்
தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நேற்றையதினம் முடிவடைந்த நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளைக் கண்காணிக்கும் பணியில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக தெரியவருகிறது.
தேர்தல் ஆணையம் மாநிலம் முழுவதும் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் கருவிகளையும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் உள்ள பாதுகாப்பு அறைகளுக்கு மாற்றியுள்ளது.
மே 4 ஆம் திகதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில், மத்திய ஆயுதக் காவல் படை மற்றும் தமிழக சிறப்பு காவல் துறையினர் அந்த மையங்களுக்குப் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.
சீல் வைக்கப்பட்டு அறைகள்
இருப்பினும், வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பில் எவ்விதத் தவறும் நேர்ந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக உள்ள திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள், தங்கள் கட்சித் தொண்டர்களை அந்த மையங்களில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தியுள்ளன.

அத்தோடு, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள பிற கட்சிகளின் பிரதிநிதிகளுடன் சுமுகமான முறையில் இணைந்து செயல்படுமாறும் மேற்படி கட்சிகள் தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளததாக கூறப்படுகிறது.
தேர்தல் ஆணையத்தின் தகவல்களின்படி, அனைத்து பாதுகாப்பு அறைகளும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையிலேயே சீல் வைக்கப்பட்டுள்ளன.
தேர்தல் முடிவுகள்
இந்தச் செயல்முறை முழுவதும் காணொளி பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, சிசிரிவி கமராக்கள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இதேவேளை, குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் தங்குவதற்குத் தேர்தல் அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளதாகவும் தெரியவருகிறது.
தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கும் நடைபெற்று முடிந்த இந்தத் தேர்தலில், திமுக தலைமையிலான கூட்டணி மற்றும் அதிமுக தலைமையிலான கூட்டணிகளுடன் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் போட்டியிட்டுள்ளதால், தேர்தல் முடிவுகள் மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |