தோல்வியை சந்தித்த மு.க.ஸ்டாலின்! தி.முக தொண்டர் எடுத்த விபரீத முடிவு
தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோல்வியடைந்த செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்த திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த திமுக தொண்டர் ஒருவர், தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் நல்லூர் பகுதியைச் சேர்ந்த 60 வயதான அபி, ரியல் எஸ்டேன் தரகராக பணியாற்றி வருவதுடன் திமுகவின் தீவிரத் தொண்டராகவும் இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் முடிவில், தமிழக முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளரிடம் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
தீவிர சிகிச்சை
இந்தத் தகவலால் மிகுந்த மனவேதனைக்கு ஆளான அபி, விஜயாபுரம் பகுதியில் உள்ள ஒரு தேநீர் கடைக்குச் சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த கண்ணாடி டம்ளரை உடைத்து, அதன் உடைந்த துண்டால் தனது கழுத்தை அறுத்துக்கொண்டுள்ளார்.

அதனை கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்த பொதுமக்கள், உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
தற்போது அவருக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இச்சம்பவம் குறித்து நல்லூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 12 மணி நேரம் முன்