காசாவில் தொடரும் இஸ்ரேலின் கோர வான்வழித் தாக்குதல்
காசாவில் (Gaza) இஸ்ரேல் (Israel) நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 44 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
காசாவில் தொடரும் வான்வழித் தாக்குதல்கள் பெண்கள், குழந்தைகள் உட்பட பலர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று காஸாவின் ஹமாஸ் ஆதரவு சுகாதார அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
தொடர் வான்வழித் தாக்குதல்
வடக்கு காசாவில் உள்ள ஜபாலியா நகரில் அமைந்திருந்த காவல் நிலையம் ஒன்று நேற்று (23.04.2025) இஸ்ரேல் நடத்திய துல்லியமான தாக்குதலுக்கு இலக்கானது.இந்த தாக்குதலில் குறைந்தது 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தாக்குதலுக்கு உள்ளான இந்த இடம், ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிஹாத் அமைப்புகளின் கட்டளை மையமாக செயல்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் விளக்கம் அளித்துள்ளது.
காசா முழுவதும் இஸ்ரேல் நடத்திய தொடர் வான்வழித் தாக்குதல்களில் 34 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
