மைத்திரிக்கு வைக்கப்படவுள்ள ‘செக்’ - உடனடியாக தூசு தட்டப்படவுள்ள கோப்புகள்
Maithripala Sirisena
court
easter attack
By Sumithiran
ஈஸ்டர் ஞாயிறு அன்று இலங்கை மீதான பயங்கரவாத தாக்குதல் தொடர்பான அறிக்கையின் பரிந்துரைகளை உடனடியாக அமுல்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
தற்போதைய அரசாங்கத்தை விமர்சித்து முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன(Maithripala Sirisena) ஆற்றிய உரையை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் இராஜினாமா செய்தாலும் அடுத்த சில வருடங்களுக்கு அரசாங்கம் தொடரலாம் என ஆளும் தரப்பு நடத்திய கலந்துரையாடலின் போது தீர்மானிக்கப்பட்டது.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு தாம் விரும்பிய எந்த தீர்மானத்தையும் எடுக்கும் திறன் இருப்பதாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் முக்கிய குற்றவாளியாக முன்னாள் அரச தலைவர் குறிப்பிடப்பட்டுள்ளார்.
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி