உயிர்த்த ஞாயிறு தாக்குதல் செயல் மனிதாபிமானமற்ற செயல்! குகதாசன் ஆதங்கம்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் செயல் மனிதாபிமானமற்ற செயல். அப்பாவி மக்கள் உள்ளிட்ட தேவாலயங்களுக்கு சென்றவர்களை அநியாயமாக கொல்லப்பட்டார்கள். இதை செய்த சூத்திரதாரிகள் தண்டிக்கப்பட வேண்டும் என இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று (14.06.2026) இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் ஒருவர்" உயிர்த்த ஞாயிறு" தாக்குதல் தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் இவ்வாறு கூறியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் கோடிஸ்வரன்
தொடர்ந்தும் தெரிவிக்கையில், “இது தொடர்பில் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோடிஸ்வரனும் நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார்.

இலங்கை தமிழரசு கட்சியின் நிலைப்பாடும் இதுவே இத்தாக்குதலுடன் தொடர்புபட்டவர்கள் பின்புலத்தில் உள்ள சூத்திரதாரிகள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன்நிறுத்தப்பட வேண்டும்.
அரசியலில் உள்ளவர்கள் முன்னர் இருந்தவர்கள் தொடர்ச்சியாக பதவியை தக்கவைப்பதற்கே முயற்சிப்பார்கள். எது எவ்வாறாயினும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் கண்டறியப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்” எனவும் மேலும் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |