கொட்டுகிறது மழை :கிழக்கு மாகாணத்திற்கான தொடருந்து சேவைகள் இரத்து
Eastern Province
Department of Railways
Weather
Rain
Train
By Sumithiran
கடுமையான வானிலை காரணமாக திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு கிழக்குப் பாதையின் தொடருந்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் இருந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்டவாளங்கள் மூழ்கியுள்ளன.
தொடருந்து சேவைகள் இரத்து
இதனால் இன்று திட்டமிடப்பட்டிருந்த ஆறு நீண்ட தூர நகரங்களுக்கு இடையேயான மற்றும் இரவு நேர அஞ்சல் தொடருந்து சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

பயணிகள் தகவலறிந்து மாற்று பயண ஏற்பாடுகளைச் செய்யுமாறு தொடருந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை மோசமான வானிலை காரணமாக மலையக தொடருந்து சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விழிநீரால் விளக்கேற்றத் தயாராகும் தமிழர் தேசம் 3 மணி நேரம் முன்
பிரபாகரன் செய்த அதே தவறை தற்போது செய்துள்ள தமிழ் புலம்பெயர் சமூகம்
22 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்