முட்டை விலை தொடர்பில் விடுக்கப்பட்ட கோரிக்கை
உற்பத்திச் செலவுகள் அதிகரித்துள்ளதால், முட்டை உற்பத்தியைத் தொடர்வது சாத்தியமற்றதாகிவிட்டது என அகில இலங்கை கோழி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஒரு முட்டையை உற்பத்தி செய்வதற்கான செலவு தற்போது ரூ. 32-ஐ எட்டியுள்ளது என சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர இன்று (16) ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.
பண்ணைகளைத் தொடர்ந்து நடத்த முடியாத நிலை
இருப்பினும், இன்று ஒரு முட்டை பண்ணைகளிலிருந்து ரூ. 27 முதல் 28 வரையிலான மொத்த விலையில் கொள்முதல் செய்யப்படுகிறது என தலைவர் குறிப்பிட்டார்.

அதன்படி, சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் இந்தப் பண்ணைகளைத் தொடர்ந்து நடத்த முடியாத ஒரு நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.
ஒரு முட்டைக்கு ரூ. 6 மதிப்புக்கூட்டு வரி (VAT) விதிக்கப்படுவதாகவும், இந்த வரி விதிக்கப்பட்டதும் உற்பத்தியைத் தொடர்வதை சாத்தியமற்றதாக்கியுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
சதொச மூலம் கொள்முதல்
அதன்படி, முட்டை உற்பத்தியாளர்களைப் பாதுகாக்க ஒரு முட்டைக்கு குறைந்தபட்ச விலையை நிர்ணயிக்குமாறு தலைவர் அரசைக் கேட்டுக்கொள்கிறார். சதொச (Sathosa) மூலம் உபரி முட்டை உற்பத்தியைக் கொள்முதல் செய்து, முட்டை உற்பத்தியாளர்களுக்கு நிவாரணம் வழங்குமாறும் தலைவர் அரசைக் கேட்டுக்கொண்டார்.

சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் முட்டை உற்பத்தியில் இருந்து விலகினால், நாட்டில் முட்டைத் தட்டுப்பாட்டைத் தடுப்பது சாத்தியமில்லை என்றும், அதன்படி முட்டைகளை இறக்குமதி செய்ய வேண்டியிருக்கும் என்றும் தலைவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், சந்தையில் ஒரு முட்டையின் விலை ரூ. 30 முதல் 35 வரை உள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |