முகமாலையில் ஆடு மேய்க்கச் சென்ற முதியவர் சடலமாக மீட்பு
கிளிநொச்சி , பளை காவல்துறை பிரிவுக்குட்பட்ட முகமாலை பகுதியில் ஆடு மேய்க்கச் சென்ற முதியவர் ஒருவர் அடி காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் இன்று (15.04.2026) இடம்பெற்றுள்ளது.
இது குறித்து தெரியவருகையில், முகமாலை, பொந்தர் குடியிருப்புப் பகுதியில் இன்று காலை வழமை போல ஆடு மேய்ப்பதற்காகச் சென்ற முதியவர், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை எனத் தெரிகிறது.
விசாரணை
இந்நிலையில், அவர் அப்பகுதியில் உள்ள ஒரு இடத்தில் உடலில் காயங்களுடன் சடலமாகக் கிடப்பது கண்டறியப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர் முகமாலை வடக்கு பகுதியைச் சேர்ந்த 71 வயதுடைய இளையவன் நல்லதம்பி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து பளை பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சடலத்தை மீட்டுள்ளனர்.
முதியவரின் உடலில் அடி காயங்கள் காணப்படுவதால், இது கொலையா அல்லது வேறு ஏதேனும் விபத்தா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதன்படி சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |