யாழில் குளவிக் கொட்டுக்கு உள்ளான வயோதிப பெண்ணுக்கு நேர்ந்த துயரம்
Sri Lanka Police
Jaffna
Sri Lanka Police Investigation
By Sathangani
யாழப்பாணத்தில் (Jaffna) குளவிக் கொட்டுக்கு இலக்காகிய வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தெல்லிப்பழை - வித்தகபுரத்தை சேர்ந்த 82 வயதான செல்வநாயகம் பாலசரஸ்பதி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில், நேற்றுமுன்தினம் (09) வீட்டுக்கு பின்னால் தென்னை ஓலையுடன் இருந்த மிகப்பெரிய குளவிக்கூட்டை குறித்த பெண் தட்டிப் பார்த்துள்ளார்.
வைத்தியசாலையில் உயிரிழப்பு
இதன்போது அதில் இருந்த குளவிகள் அவர்மீது கொட்டிய நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
எனினும் சிகிச்சை பலனின்றி அன்றையதினமே இரவு 10 மணியளவில் குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
சாட்சிகளை தெல்லிப்பழை காவல்துறையினர் நெறிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

4ம் ஆண்டு நினைவஞ்சலி