பாகிஸ்தான் தேர்தல் முடிவுகள்! ஐ.எம்.எப்க்கு கடிதம் அனுப்பிய இம்ரான்கான்

Pakistan Imran Khan Election
By Shalini Balachandran Feb 24, 2024 10:22 AM GMT
Report

பாகிஸ்தானுக்கு ஏதேனும் புதிய கடன் வழங்க ஒப்புதல் அளிக்கும் முன்பு, தேர்தல் முடிவுகளை தணிக்கை செய்ய வேண்டு என இம்ரான் கான் கோரியுள்ளார்.

பாகிஸ்தானில் கடந்த எட்டாம் திகதி பொதுத்தேர்தல் நடந்து முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டும், எந்த கட்சியும் ஆட்சியமைக்காத நிலையில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சர்வதேச நாணய நிதியத்திற்கு எழுதிய கடிதத்திலேயே குறித்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

பாகிஸ்தான் நாடு பொருளாதார சரிவால் பெரும் பின்னடைவை சந்தித்துள்ள நிலையில் உணவு மற்றும் எரிபொருள் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து உள்ளது.

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் இணைந்த இளம்பெண்ணுக்கு குடியுரிமை வழங்க மறுக்கும் பிரித்தானியா

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் இணைந்த இளம்பெண்ணுக்கு குடியுரிமை வழங்க மறுக்கும் பிரித்தானியா


கட்சிகள்

இந்நிலையில், பாகிஸ்தானில் நடந்து முடிந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் பெருபான்மை கிடைக்காமையால் இரண்டு வாரங்கள் ஆகியும் அந்நாட்டில் எந்த கட்சியும் ஆட்சியமைக்காத நிலை காணப்படுகிறது.

சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் (பி.டி.ஐ) கட்சியின் ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர்கள் தேர்தலில் அதிக அளவில் (92 இடங்கள்) வெற்றி பெற்றும் அவர்களால் ஆட்சியமைக்க முடியாத சூழலே இருந்து வந்துள்ளது.

பாகிஸ்தான் தேர்தல் முடிவுகள்! ஐ.எம்.எப்க்கு கடிதம் அனுப்பிய இம்ரான்கான் | Election Results Should Be Audited By Imran

இந்நிலையில், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சி (79 இடங்கள்), பாகிஸ்தான் மக்கள் கட்சி (54 இடங்கள்) அடுத்தடுத்த இடங்களில் உள்ளமையினால் பொருளாதார ஸ்திரத்தன்மையற்ற சூழலில் நாட்டில் ஒரு வலிமையான அரசை அமைப்பதற்கான முயற்சியில் அந்த இரு கட்சிகளும் இறங்கியதோடு கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகளும் நடந்தன.

இதனடிப்படையில் இவ்விரு கட்சிகளின் தலைவர்களும் தேசத்தின் சிறந்த நலனுக்கென கூறி கூட்டணி அரசை அமைக்க ஒப்புதல் அளித்ததோடு முன்னாள் பிரதமரான ஷெபாஸ் ஷெரீப் (வயது 72) புதிய பிரதமராகவும், முன்னாள் அதிபரான சர்தாரி (வயது 68) நாட்டின் புதிய அதிபராகவும் வருவதற்கான முடிவு எடுக்கப்பட்டன.

சீன உளவுக் கப்பல்! இந்தியாவுடன் இணையும் மாலைதீவு

சீன உளவுக் கப்பல்! இந்தியாவுடன் இணையும் மாலைதீவு


புறந்தள்ளப்பட்ட கோரிக்கை

இதையடுத்து இருவரையும் அதற்கான வேட்பாளராக பிலாவல் பூட்டோ உறுதிப்படுத்தியதையடுத்து பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப்(பி.டி.ஐ.) கட்சியின் நிறுவனர் மற்றும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சர்வதேச நாணய நிதியத்திற்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

குறிப்பிட்ட கடிதத்தில் “பாகிஸ்தானுக்கு ஏதேனும் புதிய கடன் வழங்க ஒப்புதல் அளிக்கும் முன்பு தேர்தல் முடிவுகளை தணிக்கை செய்ய வேண்டுமெனவும் இதுபோன்ற சூழலில் நாட்டுக்கு கடன் வழங்கப்பட்டால் அதனை திருப்பி செலுத்துவது யாரெனவும் இந்த கடனானது வறுமையை இன்னும் அதிகரிக்க வழிவகுப்பதுடன் நாட்டின் மீது சுமையை கூடுதலாக ஏற்றும் எனவும் எச்சரித்துள்ளார்.

பாகிஸ்தான் தேர்தல் முடிவுகள்! ஐ.எம்.எப்க்கு கடிதம் அனுப்பிய இம்ரான்கான் | Election Results Should Be Audited By Imran

இது தொடர்பாக தி நியூஸ் இன்டர்நேசனல் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ள தகவலில் புதிய அரசுடன் இணைந்து பணியாற்ற சர்வதேச நாணய நிதியம் ஆர்வம் தெரிவித்துள்ளமையால் இம்ரான் கானுடைய கோரிக்கையை புறந்தள்ளி விட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுபற்றி பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் நிதி அமைச்சரான இஷாக் தர் கூறும்போது, தனிப்பட்ட லாபத்திற்காக எதனையாவது எழுதுவது என்பது வெட்கக்கேடானது எனவும் குறித்த கடிதத்தில் எந்த முக்கியத்துவமும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.   

ரஷ்யாவிற்கு பேரிழப்பு : உளவு விமானத்தை சுட்டுவீழ்த்தியது உக்ரைன்

ரஷ்யாவிற்கு பேரிழப்பு : உளவு விமானத்தை சுட்டுவீழ்த்தியது உக்ரைன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Gagny, France

15 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023