கோட்டாபயவுடனான சந்திப்பின் பின்னணி! சுமந்திரனை அவசரமாக தொலைபேசியில் அழைத்த சவேந்திர சில்வா
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவுடனான சந்திப்பு நிறைவடைந்து, வெளியேறிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை (M.A.Sumanthiran), இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா (Shavendra Silva) தொலைபேசியில் அழைத்துப் பேசியுள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அரச தலைவருடனான சந்திப்பில், வடக்கிலுள்ள காணிகளை பாதுகாப்பு பிரிவினர் கையகப்படுத்துவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட போதிலும், அவ்வாறான ஒன்று இடம்பெறவில்லை என இராணுவ தளபதி, சுமந்திரனிடம் தெரிவித்துள்ளார்.
வடக்கில் காணி பிரச்சினைகள் இருக்குமானால், அது குறித்து இராணுவ தளபதியுடன் கலந்துரையாடுமாறு அரச தலைவர் தமக்கு கூறியதாக சுமந்திரன், சவேந்திர சில்வாவிடம் பதிலளித்துள்ளார்.
வடக்கில் காணி குறித்து ஏதேனும் பிரச்சினைகள் இருக்குமாயின், அது குறித்து தனக்கு அறிவிக்குமாறு இராணுவ தளபதி சுமந்திரனிடம் கூறியுள்ளார்