ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு அவசர அறிவிப்பு
கொழும்பில் அரசாங்கத்திற்கு ஆதரவான குழுவொன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், அந்தக் குழு காலிமுகத்திடல் நோக்கி படையெடுக்க தீர்மானித்திருந்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால், அரசாங்கத்திற்கு ஆதரவான குழுவொன்று காலிமுகத்திடல் பகுதிக்குள் நுழைந்து அங்கிருக்கும் நிலைமையை சீர்குலைக்க முயற்சிக்கலாம் என அப்பகுதியில் உள்ள ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே அங்கு அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் அனைவரும் இது தொடர்பில் அவதானமாக செயற்படுவதுடன், ஒற்றுமையாக, விழிப்புடன் தமது போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் அந்தக் குழு காலிமுகத்திடல் நோக்கி படையெடுக்க தீர்மானித்திருந்ததாக கூறப்படும் நிலையில், இறுதியில் அந்த தீர்மானம் கைவிடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இதனையடுத்தே காலிமுகத்திடல் பகுதியிலுள்ள மக்களை விழிப்புடன் செயற்படுமாறு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
