அழிவின் விழிம்பில் தமிழரசு : குழிக்குள் தள்ள காத்திருக்கும் சுமந்திரன்
தமிழர் தேசிய அரசியல் ஒரு விழுக்காட்டை அடைந்திருக்கிறது , தமிழ்த்தேசிய அரசியல் பரப்பில் தமிழர்களின் ஜனநாயக அடையாளமான கட்சி அரசியல் மிக மோசமான தமிழினத்துரோக நடவடிக்கையை அரங்கேற்றி இருப்பதாக மக்கள் விசனம் அடைந்துள்ளனர்.
உள்ளூராட்சி சபைகளில் இணைந்து ஆட்சியமைப்பது தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் அதன் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானமும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (EPDP) சார்பில் அதன் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவும் (Douglas Devananda) நேற்று வியாழக்கிழமை மாலை சந்தித்துப் பேசியுள்ளார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட சிறீதரன் எம்.பி., உள்ளூராட்சி சபைகளில் கூட்டணி அமைப்பது குறித்து டக்ளஸ் தேவானந்தாவுடன் கலந்துரையாடுவது பற்றி கட்சியின் உயர்மட்டக் குழுவில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தமிழரசுக்குள் ஏற்படப்படப போகும் பிளவு சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்வாரா சிறீதரன் போன்ற கேள்விகளுக்கு விடையாகவும்,
அதே நேரம் எதேச்சாதிகார தலைவர்களாக தங்களை வெளிப்படுத்தும் சுமந்திரன் போன்றவர்களுக்கு தமிழ் மக்கள் எப்படியான முடிவுகளை வழங்க போகிறார்கள் என்பது தொடர்பிலும் இவர் கூட்டிணைந்த தரப்பின் தமிழர் விரோத செயற்பாடுகளிலும் ஆராய்ந்து தமிழர்கள் எப்படியாக இப்போது சிந்திக்க வேண்டும் என்பது தொடர்பில் ஆராயகிறது ஐபிசி தமிழின் இன்றைய அதிர்வு.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
