தங்கம் வென்ற முல்லைத்தீவு யுவதிக்கு கிடைக்கவுள்ள கௌரவம்
event
Mullaitivu
honor
Ganesh Indukadevi
By Vanan
பாகிஸ்தானில் இடம்பெற்ற சர்வதேச குத்துச்சண்டைப் போட்டியில் தங்கம் வென்ற முல்லைத்தீவு யுவதி கணேஷ் இந்துகாதேவியை கௌரவிக்கும் நிகழ்வு ஒன்று ஒட்டுசுட்டான் - புதியநகரில் இடம்பெறவுள்ளது.
ஒட்டுசுட்டான் பிரதேச இளைஞர் கழக சம்மேளனம் நடத்தும் இந்த நிகழ்வுக்கு, ஐபிசி தமிழ் ஊடக அனுசரணை வழங்குகிறது.
இக்கௌரவிப்பு நிகழ்வு நாளைமறுதினம் ( ஜனவரி - 30) காலை 10 மணிக்கு புதிய சூரியன் விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வுக்கு முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க. விமலநாதன் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பிக்க உள்ளதுடன், அனைவரையும் இந்நிகழ்வில் பங்கேற்குமாறு விழா ஏற்பாட்டுக்குழுவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்