மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் முன்னாள் பிரதி ஆணையாளர் அதிரடி கைது!
மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் முன்னாள் பிரதி ஆணையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இன்று (28) அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
செல்லுபடியாகும் ஆரம்பப் பதிவு இல்லாத வாகனம் ஒன்றிற்கு, முறைகேடாக இலக்கத் தகடுகளை வழங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது வகிக்கும் பதவி
தற்போது பத்தரமுல்லையில் உள்ள சிறுவர் நன்னடத்தை மற்றும் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் ஆணையாளராகப் பணியாற்றி வரும் இவரை, கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அரச நிறுவனங்களில் நிலவும் ஊழல்களை ஒழிக்கும் நோக்கில் லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு முன்னெடுத்து வரும் தொடர் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்தக் கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |