முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயர் நீதிமன்றில் முன்னிலை
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) அடிப்படை உரிமைகள் மனு மீதான விசாரணை ஒன்றிற்காக சற்று முன்னர் உயர் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.
உயர் நீதிமன்றம் இதற்கு முன்னர் பிறப்பித்த உத்தரவிற்கு அமைய மைத்திரிபால சிறிசேன இன்று (29) இவ்வாறு முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரோயல் பார்க் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரதிவாதியை மன்னித்து விடுதலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய மனு தொடர்பாக உயர் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்திருந்தது.
மரண தண்டனை விதிப்பு
ரோயல் பார்க் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஜூட் ஷ்ரமந்த ஜெயமஹாவுக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பை ரத்து செய்ததிலிருந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு, அடிப்படை மனித உரிமைகளை மீறியதற்காக மைத்திரிபால சிறிசேன ஒரு மாதத்திற்குள் 1 மில்லியன் ரூபா இழப்பீடு வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்தநிலையில் இன்று (29) நீதிமன்றில் முன்னிலையாகி குறித்த நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றத் தவறியதற்கான காரணத்தைக் காட்டுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
