கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
sri lanka
university
admission
exam system
By Vanan
பரீட்சைக்கான கால அளவை மாற்றுவதோடு, பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கல்வி பொதுத்தராதர சாதாரணப் தரப் பரீட்சையை நிறைவு செய்து மாணவர்கள் உயர்தரப் பரீட்சைக்கு செல்லும் காலம் மற்றும் உயர்தரப் பரீட்சையை நிறைவு செய்து பல்கலைக்கழகம் செல்வதற்கான காலம் என்பவற்றை குறைப்பது தொடர்பில் கல்வி அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது.
இது குறித்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளார்.
இதேவேளை, பரீட்சைப் பெறுபேறுகளை விரைவில் வெளியிடுவது குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன கூறியுள்ளார்.
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…? 5 நாட்கள் முன்
தாயுமான தலைவன்…!
6 நாட்கள் முன்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்