கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
பாடசாலைகளில் பணிபுரியும் அபிவிருத்தி அலுவலர்களை ஆசிரியர் சேவையில் உள்வாங்குவதற்கான போட்டிப் பரீட்சை தற்காலிகமாக தாமதமாகும் என்று கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ அறிக்கை வெளியிட்டுள்ளார்.
பாடசாலைகளில் பணிபுரியும் அபிவிருத்தி அலுவலர்கள் உட்பட அரசுப் பணியில் உள்ள பட்டதாரி அதிகாரிகளை ஆசிரியர் சேவையில் உள்வாங்குவதற்காக, இந்த பரீட்சை மார்ச் 25, 2023 அன்று நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
வழக்கின் தீர்ப்பு
போட்டிப் பரீட்சை தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட பல வழக்குகள் இப்போது முடிவுக்கு வந்துள்ளன.
இருப்பினும், இந்த பரீட்சை தொடர்பாக மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் உள்ள நடவடிக்கைகள் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்று செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதன்படி, இந்த வழக்கின் தீர்ப்பு கிடைத்த பிறகு பரீட்சையின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
