கொலைக் குற்றச்சாட்டு : பிரபல ராப் பாடகருக்கு 12 ஆண்டுகள் சிறை
இளைஞரைக் கொன்ற குற்றத்திற்காக பிரெஞ்சு பிரபல ராப்பர் மொஹமட் ஜில்லா (Mohamed Zilla) க்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2018 ஆம் ஆண்டு பாரிஸில் 23 வயதான லோயிக் கே என்ற இளைஞனை மற்றொரு குழுவுடன் சேர்ந்து கொன்றதற்காக அந்நாட்டு நீதிமன்றம் அவருக்கு இந்த தண்டனையை வழங்கியதாக கூறப்படுகிறது.
பன்னிரெண்டு பேர் சேர்ந்து கூரிய ஆயுதத்தால் தாக்கி
மொஹமட் ஜில்லா அந்த நபரை தனது காரில் இருந்து வெளியே வீசிவிட்டு பின்னர் பன்னிரெண்டு பேர் சேர்ந்து கூரிய ஆயுதத்தால் தாக்கியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆனால், தான் நிரபராதி என்றும், இந்தக் கொலைக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். வதந்திகளின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
ராப்பராக பிரபலமாவதற்கு முன்பு
இருப்பினும், கொலை நடந்த நேரத்தில், அதை உள்ளூர்வாசி ஒருவர் படம்பிடித்துள்ளார், மேலும் முகமது ஜில்லாவின் கார் அங்கு பதிவு செய்யப்பட்டது. முகமது ஜில்லாவின் சிகை அலங்காரம் மற்றும் அவர் அணிந்திருந்த ஆடைகளும் அங்கிருந்ததாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த கொலையில் தொடர்புடைய மேலும் ஐவருக்கு 10 முதல் 18 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன் மேலும் மூவர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். தற்போது 29 வயதாகும் முகமது ஜில்லா, ராப்பராக பிரபலமாவதற்கு முன்பு பாரிஸில் பீட்சா டெலிவரி செய்பவராக பணியாற்றியதாக கூறப்படுகிறது.