நானாட்டான் பிரதேச கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரை விவகாரம்: தீர்வு கிடைக்காவிட்டால் போராட்டம்

Sri Lankan Tamils Mannar Sri Lanka SL Protest
By Shadhu Shanker Nov 10, 2024 01:23 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in சமூகம்
Report

மேய்ச்சல் தரைக்கான நிரந்தர தீர்வு அவசரமாக கிடைக்காது விட்டால் பாரியதொரு ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொள்வோம், என நானாட்டான் கால்நடை வளர்ப்பாளர் கூட்டுறவு சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

நானாட்டான் (Nanattan )பிரதேச கால்நடை வளர்ப்பாளர்களுக்கு மேய்ச்சல் தரவை க்கு என ஒதுக்கப்பட்ட கட்டுக்கரை குளம் புல்லறுத்தான் கண்டல் பகுதியில் சிலர் அடாத்தாக விவசாய செய்கையில் ஈடுபட்டு வருவதாக பாதிக்கப்பட்ட கால்நடை வளர்ப்பாளர்கள் மன்னார் மாவட்ட சிரேஷ்ட காவல் துறை அத்தியட்சகரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட போதும் இதுவரை எவ்வித தீர்வு கிடைக்கவில்லை என அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை (7) நானாட்டான் கால்நடை வளர்ப்பாளர் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் மன்னார் மெசிடோ நிறுவனத்தின் உதவியுடன் மன்னார் மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் அலுவலகத்திற்குச் சென்று தமது பிரச்சினைகளை தெரியப்படுத்தியுள்ளனர்.

தமிழ்தேசிய கூட்டமைப்பை சிதறடிக்க ராஜபக்கசர்களால் திட்டமிட்டு அனுப்பப்பட்ட சுமந்திரன்!

தமிழ்தேசிய கூட்டமைப்பை சிதறடிக்க ராஜபக்கசர்களால் திட்டமிட்டு அனுப்பப்பட்ட சுமந்திரன்!

மேய்ச்சல் தரை விவகாரம்

குறிப்பாக மேய்ச்சல் தரை காக ஒதுக்கப்பட்ட இடத்தில் சிலர் அடாத்தாக நெற்செய்கையில் ஈடுபட்டு வருகின்றமை குறித்தும் முருங்கன் காவல்துறையினர் தமது முறைப்பாட்டை ஏற்க மறுத்தமை குறித்தும் சிரேஸ்ட காவல் துறை அத்தியட்சகரின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

நானாட்டான் பிரதேச கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரை விவகாரம்: தீர்வு கிடைக்காவிட்டால் போராட்டம் | Farmers Protest Over Grazing Land In Nanattan

இந்த நிலையில் நேற்றைய தினம் (9) சனிக்கிழமை இரு தரப்பினரையும் அழைத்து தீர்வை பெற்றுத் தருவதாக காவல் துறை அத்தியட்சகர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் நானாட்டான் கால்நடை வளர்ப்பாளர் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் நேற்றையதினம் காலை மன்னார் மாவட்ட சிரேஷ்ட காவல் துறைஅத்தியட்சகர் அலுவலகம் சென்றனர்.

எனினும் எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை. எதிர் வரும் 20 ஆம் திகதி அனைத்து திணைக் களங்களையும் அழைத்து தீர்மானம் ஒன்றை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக காவல் துறை அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த இடத்தை தான் நேரடியாக வந்து பார்வையிட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 20ஆம் திகதி வரை குறித்த பகுதியில் எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டாம் என அவர் கால்நடை வளர்ப்பாளர்கள் இடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

யாழில் குடும்பமொன்றின் மீது காவல்துறையினர் மிலேச்சத்தனமாக தாக்குதல்! வெளியான காணொளி

யாழில் குடும்பமொன்றின் மீது காவல்துறையினர் மிலேச்சத்தனமாக தாக்குதல்! வெளியான காணொளி

பாரிய ஆர்ப்பாட்டம் 

அதேவேளை எமது கால் நடைகளின் மேய்ச்சல் தரையாக காணப்படும் 'புல்லறுத்தான் கண்டல்' பகுதி தெரிவு செய்யப்பட்ட போதும் இது வரை எமக்கு உரிய முறையில் கையளிக்கப்படவில்லை.

நானாட்டான் பிரதேச கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரை விவகாரம்: தீர்வு கிடைக்காவிட்டால் போராட்டம் | Farmers Protest Over Grazing Land In Nanattan

எனவே குறித்த மேய்ச்சல் தரை எமக்கு வழங்கப்படும் வரை எமது சங்கத்தின் கீழ் பதிவு செய்து கால் நடைகளை வைத்திருக்கும் கால் நடை வளர்ப்பாளர்கள் எவரும் தமது கால் நடைகளை வேறு பிரதேசங்களுக்கு எக்காரணம் கொண்டும் மேய்ச்சலுக்காக கொண்டு செல்ல மாட்டோம்.

எமது மேய்ச்சல் தரைக்கான நிரந்தர தீர்வு அவசரமாக கிடைக்காது விட்டால் பாரியதொரு ஆர்ப்பாட்டம் ஒன்றை மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக மேற்கொள்வோம், என நானாட்டான் கால்நடை வளர்ப்பாளர் கூட்டுறவு சங்கம் எழுத்து மூலம் உறிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மக்களை ஏமாற்றும் தமிழ் அரசியல்வாதிகள்! கேள்விகுறியாகியுள்ள தமிழ் மக்களுக்கான தீர்வு..

மக்களை ஏமாற்றும் தமிழ் அரசியல்வாதிகள்! கேள்விகுறியாகியுள்ள தமிழ் மக்களுக்கான தீர்வு..

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!                                 
GalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

11 Mar, 2020
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், மன்னார்

10 Mar, 2026
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

பூவரசங்குளம், குருமன்காடு

10 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, London, United Kingdom

11 Mar, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், அளவெட்டி, La Plaine-Saint-Denis, France

11 Mar, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, கொழும்பு, சுன்னாகம்

10 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், குருநகர், நெதர்லாந்து, Netherlands

11 Mar, 2016
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025