புத்தளம் - கொழும்பு பிரதான வீதியில் கோர விபத்து : மூவர் பலி... பலர் காயம்!
Sri Lanka Police
Colombo
Puttalam
Sri Lanka Police Investigation
By Sathangani
புத்தளம் - கொழும்பு பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்துள்ளனர்.
குறித்த வீதியின் முந்தலம, நவதன்குலம பகுதியில் இன்று (12) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
அதிவேகமாக வந்த உந்துருளியும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காவல்துறையினர் விசாரணை
இந்த விபத்தில் காரில் பயணித்த இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆண் என மொத்தம் மூவர் உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்த மேலும் 10 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை முந்தலம் காவல்துறையினர் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்