உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவி மாடியில் இருந்து வீழ்ந்து படுகாயம்
தற்போது நடைபெற்றுவரும் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிக்கொண்டிருந்த கொழும்பில் உள்ள பாடசாலையொன்றின் மாணவி ஒருவர் இன்று (11) மதியம் கல்லூரியின் மூன்று மாடி கட்டிடத்தில் இருந்து விழுந்து படுகாயமடைந்துள்ளார்.
இது தொடர்பாக கொழும்பு இணைய ஊடகமொன்று பம்பலப்பிட்டி காவல்துறையிடம் விசாரித்தபோது, சம்பந்தப்பட்ட மாணவி பம்பலப்பிட்டியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
உயிர் பிழைத்தது அதிசயம்
விபத்தில் அவரது இரண்டு கால்களிலும் காயம் ஏற்பட்டதால், அவர் உயிர் பிழைத்தது ஒரு அதிசயம் என்று நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆண்டு இரண்டாவது முறையாக உயர்தரப் பரீட்சைக்கு மாணவி தோற்றுவதாக தெரியவந்துள்ளது.
காவல்துறைக்கு ஏற்பட்ட சந்தேகம்
உயிரியல் வினாத்தாள் வழங்கப்படுவதற்கு சுமார் பதினைந்து நிமிடங்களுக்கு முன்பு இந்த விபத்து நடந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

மாணவி காபற் பாதையில் விழுந்ததாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பரீட்சை எழுத பயந்து மேல் மாடியில் இருந்து மாணவி குதித்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். படுகாயமடைந்த 19 வயது மாணவி மொரட்டுவையைச் சேர்ந்தவர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |