கனடா மற்றும் குரேஷியா போட்டியின் எதிரொலி; குரேஷிய அணிக்கு 50000 சுவிஸ் பிராங்குகள் அபராதம்!
உலக கால்பந்தாட்ட போட்டிகள் மிக விறு விறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
காலிறுதி ஆட்டத்தில் பங்கேற்கும் முதல் எட்டு அணிகளை தெரிவு செய்வதற்கான போட்டிகள் சுவாரஸ்யமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறன.
ஒருபுறம் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றாலும், மறுபுறம் ரசிகர்களின் மோதல்களும் வலுவடைந்துள்ளன.
சர்வதேச உதைபந்தாட்ட பேரவை அபராதம்
அந்தவகையில், கனடா மற்றும் குரேஷிய அணிகள் மோதி இருந்தன, இந்த போட்டியில் குரேஷிய அணி 4:1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றிருந்தது.
குறித்த போட்டியின் போதே குரேஷிய அணி ரசிகர்கள் ஏந்திய பதாதைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கனேடிய உதைபந்தாட்ட அணியின் கோல் காப்பாளர் மிலான் போர்ஜானை குரேஷிய உதைபந்தாட்ட ஆதரவாளர்கள் குறித்த பதாதைகளில் இழிவாக தூற்றியதற்காகவே அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
குரேஷிய உதைபந்தாட்ட சம்மேளனத்திற்கு சர்வதேச உதைபந்தாட்ட பேரவை அபராதம் விதித்துள்ளது.
இந்த செயலுக்காக 50000 சுவிஸ் பிராங்குகள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சர்வதேச உதைபந்தாட்டப் பேரவை எச்சரிக்கை
இவ்வாறு வீரர்களை மோசமாக தூற்றும் வார்த்தைகளை உள்ளடக்கிய பதாகைகள் சர்வதேச போட்டிகளில் பயன்படுத்தப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என சர்வதேச உதைபந்தாட்டப் பேரவை தெரிவித்துள்ளது.
கோல் காப்பாளர் போர்ஜான் ஒரு சேர்பியர்
கனேடா அணியின் கோல் காப்பாளர் போர்ஜான் குரேஷியாவின் சேர்பிய எல்லையில் பிறந்த ஓர் சேர்பியர் ஆவார்.
குரேஷிய படைகள் சேர்பியாவை கைப்பற்றிய வேளை, போர்ஜன் மற்றும் அவரது குடும்பத்தினர் புலம்பெயர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.