தென்னாபிரிக்க நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட தீ! கடும் போராட்டத்தில் தீயணைப்பு வீரர்கள்
Fire Accident
African
African Parliament
By Chanakyan
தென்னாபிரிக்க தலைநகர் கேப்டவுனில் உள்ள நாடாளுமன்ற கட்டிடத்தில் இன்று அதிகாலை பயங்கர தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உள்ளூர் நேரப்படி காலை 7.30 மணியளவில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
இதனால் பெரிய தீப்பிழம்புகள் மற்றும் பெரும் புகை மூட்டம் எழுந்ததுடன் தீ பரவலை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்களும் விரைந்து செயற்பட்டுள்ளனர். தீப் பரவலுக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில் பாதிப்படைந்தோர் விபரங்களும் இன்னும் வெளியிடப்படவில்லை.
தீ மூன்றாவது மாடி அலுவலகங்களில் தொடங்கி தேசிய சட்டமன்ற அறைக்கும் பரவியது என்று உள்ளூர் தீயணைப்பு சேவை செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
தீயை கட்டுப்படுத்த 35 தீயணைப்பு வீரர்கள் போராடி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…? 4 மணி நேரம் முன்
தாயுமான தலைவன்…!
19 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்