ஹோர்முஸ் நீரிணையை கடந்த முதல் பயணிகள் கப்பல்
இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே எட்டப்பட்ட 10 நாள் போர் நிறுத்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்துஇ எண்ணெய் வர்த்தகத்தின் முக்கிய வழித்தடமான ஹோர்முஸ் நீரிணை மீண்டும் கப்பல் போக்குவரத்திற்காகத் திறக்கப்படுவதாக ஈரான் அறிவித்துள்ளது.
இந்நிலையில்,பயணிகள் இல்லாமல் பயணித்ததாகக் கூறப்படும் ஒரு உல்லாசக் கப்பல், ஹோர்முஸ் நீரிணையை வெற்றிகரமாக கடந்துள்ளது.
போர் தொடங்கியதிலிருந்து அவ்வழியே சென்ற முதல் பயணிகள் கப்பல் இதுவாகும் என்று கப்பல்களைக் கண்காணிக்கும் தளமான மரைன்டிராஃபிக் தெரிவித்துள்ளது.
வெற்றிகரமாக கடந்துள்ளது
மரைன்ட்ராஃபிக் தகவலின்படி, மால்டா கொடியை ஏந்திய செலஸ்டியல் டிஸ்கவரி கப்பல், மார்ச் மாத தொடக்கத்தில் துபாய்க்கு வந்தடைந்து, கிட்டத்தட்ட 47 நாட்களாக அங்கு நிறுத்தப்பட்டிருந்தது.
அந்தக் கப்பல் வெள்ளிக்கிழமை ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து, தற்போது ஓமானின் மஸ்கட்டை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாகவும், இன்று பிற்பகலில் அங்கு வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் மரைன்டிராஃபிக் தெரிவித்துள்ளது.

லெபனான் போர் நிறுத்தத்திற்கு இணங்க, ஹோர்முஸ் நீரிணை வழியாக அனைத்து வணிகக் கப்பல்களும் தடையின்றிப் பயணிக்கலாம்.
ஈரானின் துறைமுகங்கள் மற்றும் கடல்சார் துறைகள் ஏற்கனவே அறிவித்த ஒருங்கிணைந்த வழித்தடத்தின்படி இந்தப் போக்குவரத்து அமையும் என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி வெளியிட்ட ஒரு ஓ பதிவைத் தொடர்ந்து இந்த கப்பல் நீரிணையை கடந்து சென்றறுள்ளது
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |