தமிழ் அமெரிக்க இராணுவ வீரர் உயிரிழப்பு
ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே கடந்த பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி ஆரம்பமான போர் இன்று ஒரு மாதம் கடந்தும் தொடர்ந்து நடைபெறுகின்றது.
இந்தப் போரில் முக்கிய தலைவர்கள், இராணுவ வீரர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் மத்திய கிழக்கு போரில் தமிழ் அமெரிக்க இராணுவ வீரரான விசாகன் சத்தியமூர்த்தி என்பவரும் கொல்லப்பட்டுள்ளார் என சில சமூக ஊடக பதிவுகள் வெளியாகி வருகின்றன.
தமிழ் அமெரிக்க இராணுவ வீரர்
எனினும் இவர் கடந்த மார்ச் மாதம் 21 ஆம் திகதி உயிரிழந்துள்ளார் என்பதை அமெரிக்கப் படைவீரர் விவகாரத் துறை (Veterans Legacy Memorial | U.S. Department of Veterans Affairs) சுட்டிக்காட்டியுள்ளது.
எனினும் மத்திய கிழக்கு போரில் இவர் உயிரிழந்துள்ளார் என்பது தொடர்பில் எவ்வித உத்தியோகபூர்வ அறிக்கைகளும் வெளியாகவில்லை.
1993 ஆம் ஆண்டு மே மாதம் 10 ஆம் திகதி பிறந்த இவர் கடந்த மார்ச் மாதம் 21 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

இவருடைய இறுதி நிகழ்வுகள் ஏப்ரல் 2ஆம் திகதி மதியம் 1.00 மணியளவில் 950 S Sepulveda Blvd, Los Angeles, CA 90049, United States என்ற முகவரியில் அமைந்துள்ள Los Angels National Cemetoryயில் நடைபெறவுள்ள நிலையில் அமெரிக்க இராணுவ வீரர்களால் இறுதி இராணுவ மரியாதையும் செலுத்தப்படவுள்ளது என கூறப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |