சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட 5 மீனவர்கள் கைது!
arrest
sri lanka
mullaitivu
By Shalini
முல்லைத்தீவு - மாத்தளன் பகுதி கடற்பரப்பில் தடைசெய்யப்பட்ட சுருக்கு வலைகளை பயன்படுத்தி இன்று அதிகாலை கடற்தொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட 5 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களையும் படகு ஒன்றையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்களையும் படகினையும் முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளார்கள்.
இவர்கள் மீது வழக்கு தொடர்ந்த கடற்தொழில் நீரியல் வளத் திணைக்களத்தினர் படகினையும், கைதான 5 பேரையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது மன்று ஆட்பிணையில் விடுவித்துள்ளது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்