உறவினர்களின் கதறல்களுக்கு மத்தியில் விடைபெற்ற யாழ்.மீனவர்கள்! (காணொளி)
கடந்த வியாழக்கிழமை கடற்றொழிலுக்கு சென்று காணாமல் போன நிலையில் கடந்த ஜனவரி 31ஆம் திகதியன்று சடலமாக மீட்கப்பட்ட வடமராட்சி கிழக்கு வத்திராயனை சேர்ந்த மீனவர்களான யோசேப் பிரேம்குமார் மற்றும் அருண்குமார் தணிகைமாறன் ஆகிய இருவரது இறுதிக் கிரியையகள் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
இருவரின் சடலங்களும் பிரேத பரிசோதனை முடித்து நேற்றைய தினம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களது இல்லத்திற்கு, சடலங்க கொண்டுவரப்பட்டு வத்திராயன் - உதய சூரியன் விளையாட்டு கழகத்திற்க்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு அங்கிருந்து வத்திராயன் இந்து மயானத்தில்பிற்பகல் 6.30 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
இவ் இறுதி நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஞானம் சிறிதரன், பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் வே.பிரசாந்தன், வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமரச தலைவர் க.சண்மிகநாதன் உட்பட பல நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு தமது இறுதி அஞ்சலியை செலுத்தினர்.
