காலிமுகத்திடல் தாக்குதல் - காவல்துறை மா அதிபர் விடுத்துள்ள பணிப்புரை (படம்)
அலரிமாளிகைக்கு முன்பாகவும், காலிமுகத்திடலில் அரச தலைவர் செயலகத்திற்கு முன்பாகவும் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் சட்டமா அதிபரின் அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவின் பிரதி காவல்துறை மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன பணிப்புரை விடுத்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் இனங்காணப்பட்டுள்ள 22 சந்தேகநபர்கள் இந்த குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் என்ற நியாயமான சந்தேகம் உள்ளதா என மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.
மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு அதன் முன்னேற்றத்தை சட்டமா அதிபருக்கு அறிவிக்குமாறு காவல்துறை மா அதிபர் மேலும் பணிப்புரை விடுத்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட 22 பேரை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
