உணவுப் பற்றாக்குறை - எம்பிக்களின் வாயிற்கதவை தட்டும் மக்கள்
Food Shortages
Sri Lanka
Sri Lankan Peoples
Sri Lanka Food Crisis
By Sumithiran
உணவுப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள், உணவு மற்றும் பால் மாவைக் கேட்டு பல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சிலர் சில தேவைகளுக்கு பணம் வரவு வைக்குமாறு வங்கி கணக்கு எண்களையும் அனுப்புவதாக எம்.பி.க்கள் குழு தெரிவித்துள்ளது.
உணவு மற்றும் பாடசாலை பொருட்களை வாங்க

இதற்கிடையில், அதிகமான வாக்காளர்கள் தங்கள் வீடுகளுக்கு வந்து உணவு மற்றும் பாடசாலை பொருட்களை வாங்குவதற்கு பணத்தையும் கேட்பதாக அந்த எம்.பி.க்கள் தெரிவித்தனர்.
வெளிநாடு செல்வதற்கு அதிகமானோர் உதவி கோரி வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, மக்களுக்கான அவசர நிவாரணத் திட்டங்களை நடைமுறைப்படுத்துமாறு சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தது.
5ம் ஆண்டு நினைவஞ்சலி