இலங்கைக்கு வந்துள்ள வெளிநாட்டவர்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு
வெளிநாடுகளில் இருந்து இலங்கை வந்துள்ள வெளிநாட்டவர்களின் வீசா செல்லுபடியாகும் காலம் எதிர்வரும் ஜூலை மாதம் 9ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுற்றுலா வீசா வைத்துள்ளவர்கள் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் இணையத்தளத்திற்கு பிரவேசிப்பதன் மூலம் வீசாக்களைப் பெற்றுக்கொள்ள முடியும். இந்த காலப்பகுதியில் நாட்டிலிருந்து வெளியேறுமிடத்து, ஏற்புடைய வீசாக் கட்டணத்தை விமான நிலையத்தில் செலுத்தி வெளியேற முடியும்.
வதிவிட வீசாவை வைத்திருப்பவர்கள் எதிர்வரும் ஜுலை மாதம் 9ஆம் திகதிக்கு முன்னர் நீடித்து கொள்வது அவசியம். இதற்காக, சேவை நாட்களில் முற்பகல் 8 மணி முதல் பிற்பகல் 4 மணிவரை 070 710 1050 என்ற தொலைபேசி இலக்கத்தில், பத்தரமுல்லை பிரதான அவலுவலகத்துடன், தொடர்புகொண்டு நேரத்தை ஒதுக்கி கொள்ள முடியும்.