யாழில் வெளிநாட்டு பெண்ணிடம் அதிநவீன சொகுசு கார் மோசடி
யாழ்ப்பாணத்தில் (Jaffna) அதிநவீன சொகுசு கார் ஒன்றை மோசடியான முறையில் பெற்றுக்கொள்ள முயற்சித்த நபர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தநிலையில், வெளிநாட்டில் வசிக்கும் பெண்ணொருவருக்கு சொந்தமான வாகனமே இவ்வாறு மோசடியாக பெற முயற்சிக்கப்பட்டுள்ளது.
குறித்த காரினை வாடகை அடிப்படையில் பயன்படுத்துவதற்காக நியமிக்கப்பட்ட சாரதியே இந்த மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்ணின் முறைப்பாடு
இந்தநிலையில், காரின் உரிமையை மாற்றுவதற்கான ஆவணங்களை மோசடியான முறையில் சமர்ப்பிக்க முயற்சித்த வேளையிலேயே குறித்த சாரதி சிக்கியுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், பெண்ணின் முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர் கார் சாரதியை கைது செய்துள்ளதுடன் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் அவரை முன்னிலைப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![](https://cdn.ibcstack.com/bucket/63039cb22bd37.webp)
![அகதியாய் இருக்கும் துயரம் உலகில் எவருக்கும் வேண்டாம்…](https://cdn.ibcstack.com/article/8170aadf-e519-44c1-8849-b5aa88b7da2a/24-66736d16968e6-md.webp)
அகதியாய் இருக்கும் துயரம் உலகில் எவருக்கும் வேண்டாம்… 4 நாட்கள் முன்
![இலங்கையை இரண்டாக்கிய 1956 கல்லோயாப் படுகொலை….](https://cdn.ibcstack.com/article/528b1858-c217-44bd-aa75-8d6f4258fc70/24-666c04ec6747a-sm.webp)
இலங்கையை இரண்டாக்கிய 1956 கல்லோயாப் படுகொலை….
1 வாரம் முன்![கல்வி ஆயுதம் தான் தமிழினத்தை மீள் எழுச்சி கொள்ளச் செய்யும்…](https://cdn.ibcstack.com/article/be32300b-7292-4007-95f8-41795e7a8c3f/24-6662705be1451-sm.webp)