கட்டுநாயக்கவில் வந்த வழியே திருப்பி அனுப்பபட்ட வெளிநாட்டவர்!
கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த வெளிநாட்டவர் ஒருவர் உடன் நாடு கடத்தப்பட்டுள்ளார்.
பிலிப்பைன்ஸில் உள்ள சைபர் மோசடி நிறுவனத்தில் பணிபுரிந்து விட்டு நாட்டுக்குள் நுழைய முயன்ற சீன நாட்டவர் ஒருவரே இவ்வாறு இன்று நாடுகடத்தப்பட்டுள்ளார்.
சுற்றுலா விசா வகை
சந்தேகநபர் இன்று காலை 9.45 மணியளவில் மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து ஏர் ஏசியா விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.
சுற்றுலா விசா வகையைச் சேர்ந்த வணிகப் பிரிவின் கீழ் நாட்டில் இயங்கும் ஒரு நிறுவனத்தில் பணிபுரிய வருவதாக கட்டுநாயக்க குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளிடம் அவர் தெரிவித்திருந்தாலும், அவர் வகித்த பதவி குறித்த தெளிவான மற்றும் குறிப்பிட்ட தகவலை வழங்கத் தவறியுள்ளார்.
அதன்படி, விமான நிலையத்தில் உள்ள தலைமை குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரியால் சம்பந்தப்பட்ட சீன நாட்டவர், எல்லை கண்காணிப்புப் பிரிவுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
நாடுகடத்தல்
அதனைதொடர்ந்து, அவரிடமிருந்து, பிலிப்பைன்ஸ் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டை கண்டுபிடிக்கப்பட்டது, மேலும் அவர் பிலிப்பைன்ஸின் பரானாக் பகுதியில் உள்ள ஒரு கணினி மோசடி நிறுவனத்தில் பணிபுரிந்தமையும் கண்டறியப்பட்டுள்ளது.
அந்த நிறுவம் தற்போது அந்நாட்டின் பாதுகாப்புப் படையினரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதையும், அதன் காட்சிகள் யூடியூப் மற்றும் சமூக ஊடகங்களில் உலகம் முழுவதும் ஒளிபரப்பப்பட்டுள்ளதையும் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இதன்காரணமாக கட்டுநாயக்க குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகள், இந்த சீன நாட்டவரை அவர் வந்த அதே விமானத்தில் நாடு கடத்துவதற்காக சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 13 மணி நேரம் முன்
