மீண்டும் இன்று நீதிமன்றம் வருகிறார் ரணிலின் சகா
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) செயலாளராகப் பணியாற்றிய சமன் ஏக்கநாயக்கவுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
சமன் ஏக்கநாயக்க மீண்டும் இன்று (18) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட வெளிநாட்டு விஜயம் ஒன்றிற்காக நிதி அனுமதி வழங்கியதன் மூலம், அந்த குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டின் பேரில் சமன் ஏக்கநாயக்க விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
பிணை கோரிக்கை
அவரை இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் கடந்த 11ஆம் திகதி உத்தரவிட்டிருந்தது.

இதன்போது, அவரது பிணை கோரிக்கை தொடர்பான கட்டளை இன்றைய தினம் அறிவிக்கப்படும் என கொழும்பு கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார அறிவித்திருந்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சிவபூமி எனப்படும் ஈழத்தின் முக்கிய விரதமான மகாசிவராத்திரி… 2 நாட்கள் முன்