யாழில் நான்கு மாத பெண் குழந்தை பலி - கொழும்பிற்கு உடற்கூற்று மாதிரிகள்
யாழில் (Jaffna) பிறந்து நான்கு மாதங்களேயான பெண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.
உடுவில் கிழக்கு, சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த சஜித்தீபன் கிஷாரா என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த குழந்தைக்கு கடந்த 24 ஆம் திகதி நான்கு மாதங்களில் ஏற்றப்படும் தடுப்பூசி ஏற்றப்பட்டது.
மரண விசாரணை
ஊசி ஏற்றப்பட்ட பின்னர் குழந்தையின் உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டது. இந்நிலையில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் குழந்தையை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.
வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அரைமணி நேரத்தில் குழந்தை உயிரிழந்துள்ளது.
குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். சாட்சிகளை சுன்னாகம் பொலிஸார் நெறிப்படுத்தினர்.
மரணத்திற்கான காரணம் தெரியவராத நிலையில் உடற்கூற்று மாதிரிகள் கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
