அதிரடியாக ஆடிய பெத்தும் நிஸ்ஸங்க - சுப்பர் ஓவரில் போராடிய இலங்கை
புதிய இணைப்பு
ஆசியக் கிண்ண T20 கிரிக்கெட் தொடரின் சுப்பர் 4 சுற்றின் இறுதிப் போட்டியில் இந்திய அணி சுப்பர் ஓவரில் வெற்றியீட்டியுள்ளது.
நேற்றைய போட்டியில் இந்திய (India) மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தியிருந்தன.
முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 202 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
அதிரடியாக துடுப்பெடுத்தாடிய பெத்தும் நிஸ்ஸங்க
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை 202 ஓட்டங்களை பெற்ற நிலையில் போட்டி சமனிலையில் முடிவடைந்ததால் வெற்றியாளரைத் தீர்மானிக்க சுப்பர் ஓவர் நடத்தப்பட்டது.
இலங்கை அணி சார்பில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய பெத்தும் நிஸ்ஸங்க 107 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
சுப்பர் ஓவரில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 2 விக்கெட்டுகளை இழந்து 2 ஓட்டங்களைப் பெற்றது.
3 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு சுப்பர் ஓவரில் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 3 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
முதலாம் இணைப்பு
ஆசியக் கிண்ண T20 கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றின் கடைசி போட்டியில் இரவு இந்தியா – இலங்கை (Sri Lanka) அணிகள் டுபாயில் மோதுகின்றன.
ஆசியக் கிண்ண T20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது.
8 அணிகள் கலந்து கொண்டுள்ள இந்த தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது.
இறுதிப் போட்டிக்கு தகுதி
சூப்பர் 4 சுற்றில் முதல் இரு போட்டிகளிலும் வெற்றி பெற்ற சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று விட்டது.
இந்நிலையில் சூப்பர் 4 சுற்றின் கடைசி ஆட்டத்தில் இந்திய அணி இன்று இலங்கையுடன் மோதுகிறது.
இந்த ஆட்டம் இரவு 8 மணிக்கு துபாயில் நடைபெறுகிறது. சரித் அசலங்கா தலைமையிலான இலங்கை அணி 2 ஆட்டங்களில் தோல்வி அடைந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து விட்டது.
இந்திய அணிக்கு இன்றைய ஆட்டம் நாளை மறுதினம் 28ஆம் நடைபெற உள்ள இறுதிப் போட்டிக்கான சிறந்த பயிற்சியாக அமையக்கூடும் கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
