நரிகளின் சாம்ராஜ்ஜியமாக மாறும் தென்னிலங்கையின் கிராமம் - அச்சத்தில் மக்கள்!
தென்னிலங்கையின் ஒரு கிராமம் நரிகளின் சாம்ராஜ்ஜியமாக மாறுகின்றது என அக்கிராம மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
ஆகவே இந்தப் பிரச்னைக்கு அதிகாரிகள் உடனடி தீர்வு காண வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
யக்கல வரெல்லவத்தை பிரதேசத்தில் நரிகளின் அச்சுறுத்தல் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
யக்கல ஹெட்டியதெனிய, மிரிஸ்வத்த, ஹன்சகிரிய முதலான பகுதிகளில் சில மாதங்களாக நரிகளின் நடமாட்டாம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நரிகள் நடமாட்டத்தால் அச்சம்
அப்பகுதியில் விவசாயம் செய்யப்படாத நெல் வயலை ஒட்டியுள்ள வனச்சூழலில் இருந்து இந்த நரிகள் கிராமத்திற்கு வருவதாக, மக்கள் தெரிவித்துள்ளனர்.
நரிகளின் நடமாட்டத்தினால் ஏற்பட்ட பயம் காரணமாக, அப்பகுதி மாணவர்கள் பாடசாலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், அப்பகுதி மக்கள் தினமும் காலையில் பட்டாசுகளை கொளுத்திப் போட்ட பின்னரே வேலைக்குச் செல்கின்றனர்.
எனவே இப்பிரச்னைக்கு அதிகாரிகள் உடனடி தீர்வு காண வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.