உயர்தரத்திற்கு தோற்றிய மாணவர்களுக்கு வெளியான அறிவிப்பு
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சினால் செயல்படுத்தப்படும் வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தின் கீழ் பட்டப்படிப்புகளுக்கு மாணவர்களைச் சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, 2022, 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
18 பட்டம் வழங்கும் நிறுவனங்கள்
இந்தக் கடன் திட்டத்தின் கீழ், அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட 18 பட்டம் வழங்கும் நிறுவனங்கள் வழங்கும் 131 பட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான விண்ணப்பங்களை கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் அதிகாரபூர்வ வலைத்தளத்திற்குச் சென்று பெற்றுக்கொள்ள முடியும். மேலும் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது நவம்பர் 30 ஆம் திகதியுடன் முடிவடையும்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |