இலங்கையின் எரிபொருள் கையிருப்பு தொடர்பில் வெளியான தகவல்
எதிர்வரும் மே மாதம் வரை நாட்டுக்குப் போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார்.
அத்துடன் இலங்கையின் எரிபொருள் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் மேலதிக எரிபொருள் கப்பல்கள் நாட்டை வந்தடைந்துள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) அறிவித்துள்ளது.
இது குறித்து மயூர நெத்திகுமாரகே மேலும் தெரிவிக்ககையில், 35,500 மெற்றிக் தொன் டீசலை ஏற்றிய கப்பலொன்று நேற்று (25) நாட்டை வந்தடைந்துள்ளதுடன், அதிலுள்ள எரிபொருளைத் தரையிறக்கும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
எரிபொருள் கப்பல்கள்
அத்துடன் இம்மாதத்திற்குள் மேலும் இரண்டு எரிபொருள் கப்பல்கள் இலங்கைக்கு வரவுள்ளன.

முதலாவது கப்பலில் 30,000 மெற்றிக் தொன் 92 ரக பெட்ரோல் மற்றும் 5,000 மெற்றிக் தொன் 95 ரக பெட்ரோலும் இரண்டாவது கப்பலில் 32,000 மெற்றிக் தொன் டீசல் மற்றும் 8,000 மெற்றிக் தொன் விமான எரிபொருளும் கொண்டுவரப்படவுள்ளது என தெரிவித்தார்.
இதேவேளை தற்போது நாட்டில் நடைமுறையிலுள்ள எரிபொருள் QR குறியீடு முறைமையின் கீழ் 6 மில்லியனுக்கும் அதிகமான பாவனையாளர்கள் பதிவு செய்துள்ளதாக பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |