எரிபொருள் தட்டுப்பாடு : கடற்றொழில் அமைச்சரின் அறிவிப்பு
நாட்டில் தற்போது செயற்கையாக ஏற்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டுக்கான நிலைமை ஓரிரு வாரங்களில் வழமைக்கு திரும்பும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் (Ramalingam Chandrasekar) தெரிவித்துள்ளார்.
அத்துடன் கடற்றொழிலாளர்களுக்கு தேவையான எரிபொருளை உரியவாறு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்
நாடாளுமன்றத்தில் இன்று (03) எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கிய போதே அமைச்சர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.
கடற்றொழிலாளர்களுக்கு எரிபொருள்
எனினும், கடற்றொழிலாளர்களுக்கு எரிபொருளை விநியோகிப்பதற்கான பொறிமுறை உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அதன்படி, எரிபொருளை பெற்றுக் கொள்வதற்கு கடற்றொழிலாளர்கள் ஏதேனும் சிக்கலை எதிர்நோக்கினால், அதனை உடனடியாக தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்“ என கடற்றொழில் அமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் காரணமாக எரிபொருள் நெருக்கடி ஏற்படும் என்ற அச்சத்தால் நாட்டின் பல பகுதிகளிலும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகளை தொடர்ந்தும் காணக்கூடியதாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |