மத்திய கிழக்கில் போர் பதற்றம் : நாடாளுமன்றில் ஜனாதிபதி அநுர விசேட உரை
புதிய இணைப்பு
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சற்று முன்னர் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த நிலையில் விசேட உரையாற்ற ஆரம்பித்துள்ளார்.
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தால் நாட்டுக்கு ஏற்படும் தாக்கம் தொடர்பிலேயே அவர் உரையாற்றி வருகிறார்.

முதலாம் இணைப்பு
இன்றைய (03.03.2026) நாளுக்கான நாடாளுமன்ற நடவடிக்கைகள் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன (Jagath Wickramaratne) தலைமையில் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளன.
காலை 09.30க்கு ஆரம்பமான நாடாளுமன்ற அமர்வுகள் மாலை 05.30 வரை நடைபெறவுள்ளது.
அதன்படி, காலை 09.30 முதல் 10.00 வரை நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 22 (1) முதல் (6) வரையின் பிரகாரம் நாடாளுமன்ற அலுவல்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
காலை 10.00 முதல் 11.00 வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதுடன் 11.00 முதல் 11.30 வரை நிலையியற் கட்டளை 27(2)-இன் கீழ் வினாக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
காலை11.30 முதல் மாலை 05.00 வரை அந்நியச் செலாவணிச் சட்டத்தின் கீழ் 2467/67ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
மாலை 5.00 மணி முதல் 5.30 மணி வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணைக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |