எரிபொருள் நிலையத்தில் வங்கி ஊழியர்கள் வரிசையைக் குழப்பி அடாவடி
வங்கி ஊழியர்கள் அடாவடி
யாழ். நுணாவில் ஐஓசி எரிபொருள் நிலையத்தில் தேசிய சேமிப்பு வங்கி ஊழியர்கள் வரிசையைக் குழப்பி அடாவடியில் ஈடுபட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
நுணாவிலில் அமைந்துள்ள ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் யாழ்ப்பாணத்திலுள்ள அரச திணைக்களங்களுக்கு வழங்கப்பட்ட ரோக்கன் அடிப்படையில் அதிகாலை முதல் வரிசையில் சுமார் 300 க்கும் அதிகமானவர்கள் காத்திருந்து எரிபொருள் பெற்றனர்.
பின், பிற்பகல் 4.30 மணியளவில் வரிசையின் இறுதியில் காத்திருந்த சுமார் 25 க்கும் மேற்பட்ட தேசிய சேமிப்பு வங்கி ஊழியர்கள் வரிசையைக் குழப்பி எரிபொருள் பெற்றுச் சென்றமை விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொதுமக்கள் வரிசையில் காத்திருப்பு
ஒழுங்காக வரிசையில் காத்திருந்த பொதுமக்களும், அரசாங்க ஊழியர்களும் வாக்குவாத்த்தில் ஈடுபட்ட போதிலும், எதையும் பொருட்படுத்தாமல் பதற்றமான சூழ்நிலையை ஏற்படுத்தியது.
தேசிய சேமிப்பு வங்கி ஊழியர்கள் வரிசையின்றி சென்றதைக் கண்டு, பின் வரிசையில் நின்ற ஹற்றன் நஷனல் வங்கி ஊழியர்களும் வரிசையைக் குழப்பி கட்டுப்பாடுகள் ஏதுமின்றி முழுத் தாங்கியை நிரப்பிச் சென்றுள்ளதாக தெரிய வருகிறது.
