எரிபொருள் விநியோகம் - ஐ.ஓ.சி நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு
Sri Lanka
Lanka IOC
Sri Lanka Fuel Crisis
By Sumithiran
ஐ.ஓ.சி நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு
இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் பொதுமக்களுக்கான எரிபொருள் விநியோகத்தை நிறுத்திய நிலையில் தற்போது IOC நிறுவனமே தனது எரிபொருள் நிரப்பு நிலையங்களூடாக எரிபொருளை விநியோகித்து வருகிறது.
இந்த நிலையில் தற்பொழுது திருகோணமலை முனையத்தில் இருந்து நாடு பூராகவும் எரிபொருள் விநியோகிக்கப்பட்டு வருவதாகவும், எனினும் நாட்டுக்கு தேவையான எரிபொருளில் 15 சதவீதத்தை மாத்திரமே பூர்த்தி செய்ய முடியும் எனவும் IOC எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர் கோசல விதான ஆராச்சி தெரிவித்துள்ளார்.
இன்றைய தினமும் IOC நிறுவனம் முடியுமான அளவு எரிபொருள் விநியோகத்தை மேற்கொணடதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாடு பூராகவும் 80 எரிபொருள் தாங்கி ஊர்திகளே எரிபொருள் விநியோக செயற்பாடுகளில் ஈடுபட்டுவருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்