கணேமுல்ல சஞ்சீவ கொலை : நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு

Sri Lanka Police Colombo Ganemulle sanjeewa
By Sathangani Mar 21, 2025 09:35 AM GMT
Report

கணேமுல்ல சஞ்சீவ (Ganemulla Sanjeewa) கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட 10 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு  (Colombo) நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குறித்த சந்தேக நபர்கள், இன்று (21) ஸ்கைப் (Skype) தொழில்நுட்பத்தின் மூலம் கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி (Tanuja Lakmali) முன் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இந்த சம்பவத்தில் மூன்றாவது சந்தேக நபராகப் பெயரிடப்பட்டுள்ள நீர்கொழும்பு (Negombo) காவல்துறையில் பணியாற்றிய காவல்துறை உத்தியோகத்தருக்கும், இந்தக் கொலை தொடர்பாக தேடப்படும் இஷாரா செவ்வந்திக்கும் இடையே தொடர்புகள் இருந்ததற்கான உண்மைகள் தெரியவந்துள்ளதாக, கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகள் சாட்சியங்களை முன்வைத்தனர்.

ஓய்வூதியர்களுக்கான கொடுப்பனவு : அரசிடம் கோரிக்கை விடுத்துள்ள ரவிகரன் எம்.பி

ஓய்வூதியர்களுக்கான கொடுப்பனவு : அரசிடம் கோரிக்கை விடுத்துள்ள ரவிகரன் எம்.பி

 55 பேரிடம் விசாரணை

மூன்றாவது சந்தேக நபரின் தொலைபேசியில் இரண்டு துப்பாக்கிகளின் புகைப்படங்கள் இருந்ததாகவும், அவற்றை அவர் நீக்கிவிட்டதாகவும், பின்னர் நடைபெற்ற விசாரணைகளின் போது கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகளால் அந்த புகைப்படங்கள் மீட்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

கணேமுல்ல சஞ்சீவ கொலை : நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு | Ganemulla Sanjeeva Murder Suspects Remand Extended

புகைப்படங்களில் உள்ள துப்பாக்கிகளில் ஒன்று துப்பாக்கிச் சூட்டில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாகவும், மற்ற துப்பாக்கி குறித்து மேலும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை சுமார் 55 பேரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளதாகவும், மேலும் 25 ஆதாரங்கள் அரச நிறுவனங்களிலிருந்து சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

நாடாளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் பதற்றம்

நாடாளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் பதற்றம்

விளக்கமறியலை நீடித்தல்

கொலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட அத்துருகிரிய காவல்துறையில் பணியாற்றிய அதிகாரிக்கு எதிராக நேரடி ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

கணேமுல்ல சஞ்சீவ கொலை : நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு | Ganemulla Sanjeeva Murder Suspects Remand Extended

இது குறித்து மேலும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றமையால், சந்தேக நபர்களின் விளக்கமறியலை நீடிக்குமாறு காவல்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த நீதவான், சந்தேக நபர்களை அடுத்த மாதம் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பதவி விலகவில்லை..! காவல்துறை ஊடகபேச்சாளர் அதிரடி

பதவி விலகவில்லை..! காவல்துறை ஊடகபேச்சாளர் அதிரடி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025