பிரச்சினையை 48 மணி நேரத்திற்குள் தீர்க்க முடியும் - இரண்டு வாரங்கள் எதற்கு?
எரிவாயு கொள்கலன்கள் வெடிக்கின்றன என்பதை எந்த பௌத்த தேரராவது அரசதலைவரின் கவனத்துக்கொண்டு சென்றனரா? என உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
ஒரு சூழ்ச்சியின் பிரதிபலனாகவே தற்போது எரிவாயு கசிவினால் ஏற்படும் வெடிப்புகள், தீப்பரவல்கள் என்பன நடக்கின்றது
இது மிகவும் பாரதூரமான பிரச்சினை என்பதால், தொடர்ந்தும் வீடுகள், உணவகங்கள் அல்லது பொது சொத்துக்கு சேதம் ஏற்பட்டால், எதிர்காலத்தில் நடப்பவற்றை அரசாங்கம் காணமுடியும். இதனால், இந்த பிரச்சினையை அரசாங்கம் உடனடியாக தீர்க்க வேண்டும்.
தேசபந்து தென்னகோன் தலைமையில் குழு நியமிக்கப்பட்டுள்ளது. 48 மணி நேரத்திற்குள் இந்த பிரச்சினையை தீர்க்க முடியும். இரண்டு வாரங்கள் எதற்கு?. அப்படியானால் இரண்டு வாரங்கள் வெடிப்புச் சம்பவங்கள் நிகழ வேண்டும் அப்போதான் பிரச்சினை உச்சத்திற்கு வரும். இவை எல்லாம் திட்டமிடல்கள்.
அரசதலைவர் இந்த பிரச்சினை பற்றி உணரவில்லை என்றால், அரசதலைவருக்கு பிரித் நூல் கட்டிய, நாட்டின் மாகாநாயக்க, அநுநாயக்க உட்பட்ட பிக்குமாருக்கு தானம் கிடைக்காது என்பதை கூற விரும்புகிறேன்.
வீடுகளில் எரிவாயு கொள்கலன்கள் வெடிக்கின்றன. மாகல்கந்தே சுதத்த, இத்தே கந்தே, மெடில்லே போன்ற வொயிஸ் கட் தேரர்கள் தற்போது வீதிக்கு வர வேண்டும்.
இந்த வெடிப்புச் சம்பவங்களால் ஏற்பட்டுள்ள மரணங்கள், காயங்களுக்கு பந்துல குணவர்தன மற்றும் லசந்த அழகியவண்ண ஆகிய அமைச்சர்கள் பொறுப்புக் கூற வேண்டும் என மேலும் தெரிவித்துள்ளார்.