சாதாரணதர பரீட்சை -6000ற்கும் மேற்பட்ட மாணவர்கள் தொடர்பில் வெளியான தகவல் ( முழுமையான விபரம் உள்ளே)
வெளியாகிய 2021 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி 6,566 மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் சித்தியடைய தவறியுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயம் தெரிவித்துள்ளார்.
அத்துடன் 231,982 பரீட்சார்த்திகள் உயர்தரத்தில் கற்பதற்கு தகுதி பெற்றுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
498 மாணவர்களின் பெறுபேறுகள் இடைநிறுத்தம்

தேர்ச்சி பெற்ற மாணவர்களில் 10,863 பேர் 9 ஏ பெற்றுள்ளனர். மேலும், 498 மாணவர்களின் பெறுபேறுகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை கடந்த 2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2021 ஆம் ஆண்டுக்கான சித்திவீதம் குறைவடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இதனிடையே 2021 கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறு சான்றிதழ்களை எதிர்வரும் திங்கட்கிழமை (28) முதல் பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் தர்மசேன தெரிவித்தார்.
ஒன்லைன் முறையில் அதற்கான வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.