சாதாரண தரப் பரீட்சை முடிவு - மாவட்டத்தில் கிளிநொச்சி மகாவித்தியாலயம் முதல்நிலை பெற்று சாதனை
புதிய இணைப்பு
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இரண்டு கல்வி வலயங்களில் உள்ள பாடசாலைகளில் கிளிநொச்சி மகாவித்தியாலயம் வெளியாகியிருக்கும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், கிளிநொச்சி மகாவித்தியாலயம் முன்னணியில் உள்ளது.
அந்த வகையில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 23 பேர் 9 ஏ சித்திகளைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
அத்துடன் 16 மாணவர்கள் 8ஏ சித்திகளைப் பெற்றுள்ளார். 8 மாணவர்கள் 7ஏ சித்திகளைப் பெற்றுள்ளார். 14 மாணவர்கள் 6ஏ சித்திகளைப் பெற்றுள்ளார். 7 மாணவர்கள் 5ஏ சித்திகளைப் பெற்றுள்ளார்.
மேலும், 225 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியிருந்த நிலையில், அவர்களுள் 220 பேர் சித்தியடைந்துள்ளதுடன், 68 மாணவர்கள் அதி சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர்.
முதலாம் இணைப்பு
2024 (2025) – கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளை பரீட்சைத் திணைக்களம் (Department of Examinations) வெளியிட்டுள்ளது.
அந்தவகையில் வெளியான சாதாரண பரீட்சை பெறுபேறுகள் அடிப்படையில் வவுனியா - இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் தமிழ் மொழி மூலம் 23 மாணவர்களும் ஆங்கில மொழி மூலம் 11 மாணவர்களுமாக 34 மாணவர்கள் 9 பாடங்களில் ஏ தர சித்தியை பெற்றுள்ளனர்.
இதேவேளை 17 மாணவர்கள் தமிழ் மொழி மூலமாகவும் 3 மாணவர்கள் ஆங்கில மொழி மூலமாகவும் 8 பாடங்களில் ஏ தர சித்தியையும் பெற்றுள்ளனர்.
பரீட்சை மீள் மதிப்பீட்டு
இதேவேளை, 2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி, 237,026 மாணவர்கள் உயர்தரக் கல்விக்கு தகுதி பெற்றுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் A.K.S. இந்திகா குமாரி (A.K.S. Indika Kumari) தெரிவித்துள்ளார்.
இது சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் எண்ணிக்கையில் 73.45% என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன், 13,392 மாணவர்கள் அனைத்து பாடங்களிலும் 9 A சித்திகளை பெற்றுள்ளதாகவும் இது மொத்தப் பரீட்சார்த்திகளில் 4.15% என பரீட்சை ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார்.
மேலும், பரீட்சை மீள் மதிப்பீட்டு விண்ணப்பங்கள் ஜூலை 14 முதல் 28 வரை ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
