இந்தியாவிற்கு செல்ல முயன்ற பெண் கட்டுநாயக்காவில் கைது
Bandaranaike International Airport
Sri Lanka
By Sumithiran
இரத்தினக்கற்களை இந்தியாவிற்கு கடத்த முயன்ற பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பைச் சேர்ந்த 30 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.
இரத்தினகற்கள்

ரூபா 290 மில்லியன் பெறுமதியான 2.311 கிலோ கிராம் இரத்தின கற்கள் இவரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த பெண் தனது ஆடைக்குள் மாணிக்கக் கற்களை மறைத்து வைத்திருந்தநிலையில் கைது செய்யப்பட்டதாக இலங்கை சுங்கப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.