ஜேர்மனியை உலுக்கும் படுகொலைகள்: வைத்தியரின் அதிர்ச்சிகர பின்னணி!!
பல மருந்துகளை கலந்து 15 நோயாளிகளைக் கொலை செய்ததாக ஜெர்மன் நோய்த்தடுப்பு சிகிச்சை வைத்தியர் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட வைத்தியர் 2024 ஓகஸ்ட் மாதத்தில் கைது செய்யப்பட்டார், மேலும் அவருக்கு எதிராக நடத்தப்பட்ட விசாரணைகளின் போது இந்த உண்மைகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
தற்போது பெர்லினில் உள்ள நீதிமன்றத்தில் சம்பந்தப்பட்ட வைத்தியர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கொடிய மருந்து கலவை
சந்தேக நபரான 40 வயது வைத்தியர், ஆதாரங்களை மறைக்க பல பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு தீ வைத்துள்ளதாகவும் குற்றம் சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்த சந்தேக நபர், நோயாளிகளுக்கு அவர்களிள் ஒப்புதல் இல்லாமல் தொடர்புடைய மருந்துகளை வழங்கியதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
2021 செப்டம்பர் முதல் 2024 ஜூலை வரை சந்தேகநபரான வைத்தியரின் கொடிய மருந்து கலவையினால் கொல்லப்பட்ட 15 பேரில் 12 பேர் பெண்கள் என்றும் கூறப்படுகிறது.
கொலைகள் அதிகரிக்கும் வாய்ப்பு
அத்துடன், பாதிக்கப்பட்டவர்கள் 25 முதல் 94 வயதுடையவர்கள் என்றும் அவர்கள் குறித்த கொடிய மருந்தை உட்கொண்ட சில நிமிடங்களில் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், சந்தேகநபரான வைத்தியர் ஜெர்மனியின் பல மாநிலங்களில் பணிபுரிந்துள்ளதுடன், அவர் கொலை செய்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்காலம் என்றும் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், சம்பந்தப்பட்ட வைத்தியர் ஜூலை 2024 இல் ஒரே நாளில் இரண்டு நோயாளிகளைக் கொன்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
சந்தேகத்திற்குரிய வைத்தியர் 2024 ஓகஸ்ட் மாத்தில் கைது செய்யப்பட்டபோது, நான்கு பேரைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
you may like this,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
